பல நாடுகளில் வழக்கு மொழிகள் மட்டும் பழக்கத்தில் இருந்த காலத்திலேயே
இலக்கண இலக்கியங்களில் சிறந்து நின்றோம் நாம்...
இலக்கண இலக்கியங்களில் சிறந்து நின்றோம் நாம்...
பொதிகையில் தமிழ் வளர்த்தார் அகத்தியர்...
திருக்குறள் எனும் திவ்ய நூல் இயற்றப்பட்டது இரண்டாயிரம் வருடங்கள் முன்பே ...
முத்தமிழ் சங்கம் தமிழுக்குத் தாய் வீடு...
சேர சோழ பாண்டியர்களின் செல்லக் குழந்தை தமிழ்...
எத்தனையோ வீர தீர பரம்பரைகள் செங்கோல் நாட்டிய நாடு...
போர்கள் தான் எத்தனை எத்தனை ...
இன்னும் பல வீரப் பின்னணிகள் கொண்ட தமிழ் இனம்
இன்று இலங்கையில் படும் துயரம் கண்டு கொதிக்கிறது நெஞ்சம்...
தமிழனே, நீ இலங்கையில் வடிக்கும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் ,
தமிழகத் தமிழ் இதயங்களில் கசியும் ரத்தம்...
ஈழத் தமிழர்களின் நிலை கண்டு கவலைகளே காலை உணவாகின்றன...
-- தமிழ் இனம்...
0 comments:
Post a Comment