நதிக் கரையோரம் நாம் நடந்து வந்த பாதச் சுவடுகள் கூட இன்னும் மறையவில்லை...
அதற்குள் ஏனிந்தப் பிரிவு நமக்குள்...
நொடிப் பொழுதும் எனைப் பிரிய சம்மதிக்காதவளே எப்படியடி எனை நோகடித்து போனாய் ....
சிட்டாய் என் வாழ்வில் சிறகடித்தவளே ,
எனை சிதைத்ததுப் போனதேன் ....
மறந்து விடு என ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டுப் போனவளே ...
எதையடி மறப்பேன்..
விழி எனும் உளி கொண்டு எனை சிலை செதுக்கினாயே,
அதை மறக்கச் சொல்கிறாயா .....
என் கண்ணீர்த் துளிகளை புன்னகை பூக்களாய் மாற்றினாயே,
அதை மறக்கச் சொல்கிறாயா...
அஸ்தமன சூரியன் கூட உன் கன்னத்தின் சிவப்பில்லை என கவிதை எழுத வைத்தாயே ,
அதை மறக்கச் சொல்கிறாயா...
உன் புன்னகை கண்டால் நந்தவனத்து மலர்களெல்லாம் கர்வம் இழந்து போகும் எனக் கவி பாடித் திரிந்தேனே....
அதை மறக்கச் சொல்கிறாயா...
தென்றலில் கூட உன் வார்த்தையின் குளுமை இல்லை என தெவிட்ட தெவிட்ட சொன்னேனே ,
அதை மறக்கச் சொல்கிறாயா...
உன் விழியோரக் கண்ணீரை கண்டால் என் இதயத்தின் இரத்த ஓட்டமே நின்றுவிடுமென்று சத்தியம் செய்தேனே
அதை மறக்கச் சொல்கிறாயா...
உன்னை நினைத்தே எனை மறந்தேனே , அதை மறக்க சொல்கிறாயா...
உன்னோடு பேசும் நொடிகளெல்லாம் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நொடிகள் என்று பறை சாற்றினேனே ,
அதை மறக்கச் சொல்கிறாயா...
நீ கோபப்படுகின்ற நொடிகளில் கோடிக் கோடி அம்புகள் என் நெஞ்சை துளைக்கின்றன என தவித்தேனே ,
அதை மறக்கச் சொல்கிறாயா...
உன்னை நினைத்தே என் இரவுகளை எல்லாம் கண்ணீரில் நனைதேனே ,
அதை மறக்கச் சொல்கிறாயா...
உன்னை பற்றி எழுத காகிதம் போதவில்லை என வானைக் கோரினேனே,
அதை மறக்கச் சொல்கிறாயா...
உன் முனகல் கூட மெல்லிசை என மெத்தனம் கொண்டேனே,
அதை மறக்கச் சொல்கிறாயா...
உன்னை தவிர்த்து எனக்கு வேறு உலகில்லை என உறுதி கூறினேனே,
அதை மறக்கச் சொல்கிறாயா...
கடலலைகள் உன் கால் தழுவுகையில் குழந்தை போல் குதூகலித்தாயே ,
அதற்காகவே ஆயிரம் கவிதைகள் எழுதலாமென்று ஆவல் கொண்டேனே அதை மறக்கச் சொல்கிறாயா...
உன் விழியோர மை கொண்டு காவியம் பல எழுதலாம் என்று கனவு கண்டேனே அதை மறக்க சொல்கிறாயா...
உன் விரல் பிடித்து நடக்கையில் ஒன்பதாவது திசையை உணர்ந்தேன் என உவகை கொண்டேனே ,
அதை மறக்கச் சொல்கிறாயா...
நீ கண்ணிமைப்பதற்குள் வானத்து நட்சத்திரங்களை எல்லாம் அள்ளி வந்து உன் காலடியில் சமர்ப்பிப்பேன்
என ஆவல் கொண்டேனே,
அதை மறக்கச் சொல்கிறாயா...
என்றோ உன் கூந்தலில் இருந்து உதிர்ந்த மல்லிகையை புத்தக மத்தியில் பார்த்த போது சிலிர்த்தேனே ,
அதை மறக்கச் சொல்கிறாயா...
மரணம் கூட உன் மடியில் தான் என கண்ணீர் நிறைய கூறினாயே அதை ஏன் சொல்கிறாயா...
என் ரத்தத்தில் நிறைந்து சித்தத்தில் உறைந்தவளே ...
இப்படிக்கு,
உன்னை மறக்க முடியாமல் மரணித்து போகிறவனின் கடைசி கண்ணீர் துளிகள்....