Thursday, December 18, 2008

இன்னும் என்ன இருக்கிறது வாழ...

நடு இரவில் கலைகிறது உறக்கம் ...

துரோகம் கண்டு கண்டு கருகிப் போன என் இதயத்துக்கு இதம் தேடி அலைய எனக்கு விருப்பமில்லை...


கண்ணீர்த் துளிகளை கர்ப்பம் தாங்கிய விழிகளோடு சாய்ந்து கொள்ள , தோள்களை தொலைத்து விட்டு

தனியே நான் மட்டும்...

நீ இல்லாமல் என்ன மிஞ்சியிருக்கிறது என் எதிர்காலத்தில்...

பார்வையைத் தொலைத்து விட்ட எனக்கு பாலை வனமும் பசும் சோலையும் ஒன்று தானே ,

செவிடாகிப் போன பின் ஓலமும் மெல்லிசையும் பிரித்தறிய முடியா விஷயங்கள் தானே...

உதடுகளுக்குள் சிறை பட்டு வெளியாக மறுக்கும் வார்த்தைகள் ,

ஒரு வேளை நீ வந்தால் தான் விடுதலை பெறுமோ என்னவோ...


இவையெல்லாம் அறிவார் யாரோ ....


பிரிவென்னும் பூதம் தன்னிரு கைகளில் நம்மிருவரையும் இரு வேறு திசைகளில் தூக்கி எறிய,


ஏது செய்வோம் நாம் ???

நீ திரும்பி வரும்போது நான் உயிரோடு இருந்தால் நிச்சயம் சந்திப்போம்..





எழுத வேண்டும் இன்னமும்....

இன்னும் எழுதப் படாமல் எத்தனை எத்தனையோ எனக்குள்...


உன்னை சந்தித்த முதல் நொடி...


முதன் முதலாக நான் கண் கலங்கிய போது என்னை ஆறுதல் படுத்த ,


வார்த்தைகளுக்காக நீ தடுமாறித் தவித்த நொடிகள்...



உன்னோடு வாதிட்டுவிட்டு இரவெல்லாம் உறக்கத்தை விவாகரத்து செய்த நொடிகள்...


இப்படி எத்தனை எத்தனையோ ,

இன்னும் எழுதப் படாமல் என் மனதுக்குள் கருவாய்....

Monday, December 15, 2008

உறுதியாகச் சொல்கிறேன்...

அடிக்கடி...

மனது காயப் படும் போதெல்லாம்

அழையாத விருந்தாளியாய்

கண்ணீர் துளிகள்.....

ஹும்ம்...

இயல்பை தொலைத்து இயந்திரமாகி விட்ட உலகில்

குழந்தையின் சிரிப்பு கூட ,

பாலை வனத்தில் விழுந்த

பனித் துளியாய் ....

நினைவுகள்...


கவிதை...

தனிமையில் வெகு நேரம் யோசித்து

எதுவும் தோன்றாமல்

எழுது கோலை கவிழ்த்து, எழுந்த போது ,

தோன்றியது

கவிதை...

Friday, December 5, 2008

ஆதிக் கவிதை...


அன்னை

என்னை

அள்ளி

முத்தமிட்ட

தருணம்...

Monday, December 1, 2008

உணர்வதற்கு மட்டும்...

என் எண்ணங்கள்

பேனா மை வழியே

உதிர மறுத்த போதுதான்

உணர்ந்தேன் ,


அவை எழுதுவதற்கு அல்ல என்று ...


Blogspot Templates by Isnaini Dot Com. Powered by Blogger and PDF Downloads