Monday, February 2, 2009

எங்கள் கிராமம்...


நகரத்தின் கலாச்சாரத்திற்கு மாறி அதன் போக்கிற்கு வளைந்து விட்ட போதும் ,
என் ஓய்வு நேரங்களை ஆக்கரமித்துக் கொண்டு
கண்முன் விரியும் என் கிராமம் ...


பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் அதிகம் பேசப்படாத ஒரு சின்னக் கிராமம் ...
அதிகப்படியாக ஐநூறு மக்களின் முகவரி அந்த கிராமம்...


மற்றபடி ஆறு மாதம் தண்ணீர் ஓடும் சிற்றோடை ,
மணிக்கொரு முறை வந்து போகும் நகரப் பேருந்து என
காற்று மாசுபாட்டை அறியாத ஒரு கிராமம்...


ஐந்தாம் வகுப்பு வரை கொண்ட பள்ளிக்கூடம் ,
மேல்நிலைப்பள்ளியாக கடந்த பத்து வருடங்களாக காத்துக் கிடக்கிறது...


விநாயகர் கோவில் திண்ணையில் எப்போதும்
இரண்டு மூன்று பெரியவர்களைப் பார்க்கலாம் ...
இன்னும் காவல் துறை எங்கள் கிராமத்திற்கு வந்ததாய்
எனக்கு நினைவில்லை...



மழை பொழிந்து விட்டால் போதும்,
பச்சை வர்ணம் அடித்தாற் போல்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை...


மழை பொழிந்த ஓரிரு நாடகளில் மண்ணை விட்டு
முட்டி மோதி வரும் சின்னஞ்சிறு புட்கள்
அதுவும் காலை நேரங்களில் பனித்துளி கிரீடம் சுமந்து கொண்டு கொள்ளை அழகு...



எங்கள் கிராமத்தை பற்றி நினைக்கும் போதெல்லாம் தவறாமல்
என் நினைவுகளில் நிறைந்து விடும் பொங்கல் விழா ...


மார்கழி மாதம் தொடங்கினாலே , சாணிப் பிள்ளையார்கள் அருகம்புல் கிரீடத்தோடும்
அரசாணிப்பூவோடும் உதிக்கத் தொடங்கி விடுவார்கள்....


பொங்கல் காலங்களில் எங்கிருந்து தான் வருமோ
அத்தனை அழகு எங்கள் கிராமத்திற்கு ...
நெல்லும் , கரும்பும் , மஞ்சளும்
அறுவடையாகி வீட்டு முற்றத்தை நிறைத்து விடும்...



பொங்கலுக்கு முதல் நாள் மாடுகள் எல்லாம்
கொம்புகளில் புது வர்ணத்தோடு சலங்கை
ஒலி எழ நடந்து வரும் அழகே அழகு...


மூன்று நாளும் பொங்கல் களை கட்டி விடும்...

இப்படி இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம்

எங்கள் கிராமத்தைப் பற்றி ...




2 comments:

Unknown said...

nice..

Siva said...

really Excellant ..... one day i want 2 see ur village...Will you invite me?


Blogspot Templates by Isnaini Dot Com. Powered by Blogger and PDF Downloads