இன்னும் எழுதப் படாமல் எத்தனை எத்தனையோ எனக்குள்...
உன்னை சந்தித்த முதல் நொடி...
முதன் முதலாக நான் கண் கலங்கிய போது என்னை ஆறுதல் படுத்த ,
வார்த்தைகளுக்காக நீ தடுமாறித் தவித்த நொடிகள்...
உன்னோடு வாதிட்டுவிட்டு இரவெல்லாம் உறக்கத்தை விவாகரத்து செய்த நொடிகள்...
இப்படி எத்தனை எத்தனையோ ,
இன்னும் எழுதப் படாமல் என் மனதுக்குள் கருவாய்....
1 comments:
really nice de .
.
take care.
.
Post a Comment