Thursday, December 18, 2008

இன்னும் என்ன இருக்கிறது வாழ...

நடு இரவில் கலைகிறது உறக்கம் ...

துரோகம் கண்டு கண்டு கருகிப் போன என் இதயத்துக்கு இதம் தேடி அலைய எனக்கு விருப்பமில்லை...


கண்ணீர்த் துளிகளை கர்ப்பம் தாங்கிய விழிகளோடு சாய்ந்து கொள்ள , தோள்களை தொலைத்து விட்டு

தனியே நான் மட்டும்...

நீ இல்லாமல் என்ன மிஞ்சியிருக்கிறது என் எதிர்காலத்தில்...

பார்வையைத் தொலைத்து விட்ட எனக்கு பாலை வனமும் பசும் சோலையும் ஒன்று தானே ,

செவிடாகிப் போன பின் ஓலமும் மெல்லிசையும் பிரித்தறிய முடியா விஷயங்கள் தானே...

உதடுகளுக்குள் சிறை பட்டு வெளியாக மறுக்கும் வார்த்தைகள் ,

ஒரு வேளை நீ வந்தால் தான் விடுதலை பெறுமோ என்னவோ...


இவையெல்லாம் அறிவார் யாரோ ....


பிரிவென்னும் பூதம் தன்னிரு கைகளில் நம்மிருவரையும் இரு வேறு திசைகளில் தூக்கி எறிய,


ஏது செய்வோம் நாம் ???

நீ திரும்பி வரும்போது நான் உயிரோடு இருந்தால் நிச்சயம் சந்திப்போம்..





3 comments:

தமிழ் said...

அருமை

Anonymous said...

தங்கள் வருகைக்கும் , தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி திகழ்மிளிர் ....

Siva said...

Really Excellant One!!!!!!!!!!!!


Blogspot Templates by Isnaini Dot Com. Powered by Blogger and PDF Downloads