Thursday, November 27, 2008

மனதுக்குள்....

அழகான அந்தி மாலை நேரம் ....

நொடிகொரு முறை கரைக்கு விஜயம் செய்து விட்டு போகும் அலைகள்...

நீலம் நிறைந்த கடல்....

கடலின் கடைசி நுனியில் கரைந்து கொண்டிருக்கும் செந்நிற சூரியன்....

மனது நிறைந்த கவிதை....

தோள் சாய்ந்து தலை அசைக்க நீ....

அணைந்து போகும் என் உணர்வுகளை உயிர்ப்பிக்க உன் பார்வை கீற்று...

போதும் ,

இந்த ஜென்மத்தில் இது போதும்....

ஏதோ பிறவிப் பயனை அடைந்து விட்ட சிலிர்ப்பு

மனதுக்குள்....

0 comments:


Blogspot Templates by Isnaini Dot Com. Powered by Blogger and PDF Downloads