Thursday, November 27, 2008

இன்னும் ஏக்கத்தோடு ...

மழை பெய்து

கொண்டிருந்த ஒரு மாலை வேளையில்

எதிர்பாராத வினாடியில் உன் சந்திப்பு...

மனதுக்குள் ஒரு பனி ஊர்வலம் ....

நீ பேசுவாய் என நானும்,

நான் பேசுவேன் என நீயும்,

மௌனத்தில் கரைந்தன நொடிகள் ...

ஒரு வழியாய் வார்த்தைகளை சேகரித்து கொண்டு நிமிர்ந்தேன்.....

உன் பார்வை பட்டு சிதறின வார்த்தைகள் ....

மீண்டும் தொடர்ந்தது மௌன தேவதையின் ஆட்சி....

பொறுமை இழந்து மழையும் விடை பெற்று சென்று விட்டது....

விழியசைவில் விடை பெற்று கொண்டு

எதிர் திசையில் இயங்கின கால்கள்...

வழக்கம் போல் உனக்கான வார்த்தைகள் என்னோடும்

என் மனது உன்னோடுமாய் .......





1 comments:

Sonu said...

Unakum Un kavithai varigalukum
nan thalai vanangugiren en anbu thozhiye


Blogspot Templates by Isnaini Dot Com. Powered by Blogger and PDF Downloads